அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்காக பணத்தைப் கீழே பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அகால மரணமான உள்ளூர் கார் கழுவும் (car wash) உரிமையாளரான தோமஸ் எம்பவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்களை மக்கள் செறிவாக உள்ள பகுதியில் அவரது உறவினர்கள் கொட்டியுள்ளனர்.

காலமாகிய தோமஸ் தான் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பின்னர் அவர்களுக்கே திரும்பச் செலுத்த வேண்டும் என இறுதி ஆசையாக இந்த கோரிக்கையை வைத்திருந்ததால் இவ்வாறு செய்யப்பட்டது என தெரியவருகிறது.
குறித்த நபர் மிகவும் இரக்கமுள்ளவர் எனவும் இந்தச் செயல் அவர் மக்கள் மீது வைத்த அன்பை காட்டுகிறது எனவும் அவரது இழப்பு தம்மை கவலையடைய வைப்பதாக நண்பர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
