சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முகநூலில் கருத்துக்கள் சொல்லத் தொடங்கியுள்ள யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி அர்ச்சுனாவை கைது செய்து சிறைச்சாலையில் அடைக்க இலங்கை அரச இயந்திரம் ஆயத்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எந்த நேரத்திலும் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்படலாம் என கொழும்பில் உள்ள அரச சார்பு முக்கிய ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மிகவும் நேர்மையான செயற்பாட்டால் தமிழ் மக்களிடம் ஒரு சில நாட்களில் பிரபலமடைந்த வைத்தியர் அர்ச்சுனாவின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் ஒருமித்த ஆதரவைக் கொடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த முற்பட வேண்டும் என அர்ச்சுனாவுக்கு நெருங்கிய தரப்புக்கள் தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.
அர்ச்சுனா கைது செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவான செயற்பாட்டை தமிழ் அரசியல்வாதிகள் எடுக்காவிடின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கணிசமான அளவு குறைவடையும் என்பது வெளிப்படை உண்மை என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.