நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் மனு

0
61

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனு இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.