நுவரெலியா போன்று மாறிய கொழும்பு! மறைந்து போன கட்டடங்கள்(Video)

0
188

கடந்த சில நாட்களாக கொழும்பில் கடும் மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், நேற்றையதினம் காலை கொழும்பு நகரம் கடும் பனியால் சூழப்பட்டிருந்தது.  

நேற்று மாலை வேளையில்  பலத்த காற்று வீசியதுடன் கடும் இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.

பனி போர்த்திய கொழும்பு….

இதன் காரணமாக  கொழும்பு நகரில் உள்ள பல வீதிகளின் ஓரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்தன. 

ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்தநிலையில், கொழும்பு நகரில் நேற்று காலை கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவியதுடன் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

நுவரெலியாவைப் போல காட்சியளிப்பதுடன், பல உயிர்ந்த கட்ட பனியால் சூழப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

video source from Lanka sri