சமூக வலைதளங்களில் வெளியான உயர்தர பரீட்சை வினாத்தாள் இரத்து!

0
333

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி இரண்டாவது வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.