அமெரிக்கா, கனடிய பொருட்களுக்கு 25% வரி விதித்ததைத் தொடர்ந்து கடுமையான பதிலடி அளிக்கத் தயாராக உள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த தார்மீகமற்ற முடிவை கனடா அமைதியாக பார்க்கப் போவதில்லை” என்று பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரிகள் அமலுக்கு வந்தவுடன் கனடா மின்னல் வேக பதிலடியாக $155 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் என தெரிவித்துள்ளார்.

மொத்தமாக $30 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீதான முதல் கட்ட வரிகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 21 நாட்களுக்குப் பிறகு மேலும் $125 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கனடாவுக்கு மட்டுமல்ல அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும்” என வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி கண்டனம் தெரிவித்தார்.