3 வங்கிகள் மூலம் பிள்ளையானின் கட்சிக்கு பெருமளவு பணம்! வெளிவந்துள்ள புதிய தகவல்

0
225

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பெருமளவு பணம் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

குறைக்கப்பட்ட பணம்

மேலும் தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது.

3 வங்கிகள் மூலம் பிள்ளையானின் கட்சிக்கு பெருமளவு பணம்: அசாத் மௌலானா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் | Ms Gr Continued To Keep Tmvp On Payroll

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டன.

வழங்கப்பட்ட போலி பட்டியல்கள்

மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டன. கட்சியின் சார்பில் நான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கினேன்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.