மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரினையை நீந்தி கடக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் தெரிவித்துள்ளார்.
புனித மைக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி விருது
புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகிய மூவரே இந்த சாதனையை நிலைநாட்டவுள்ளனர்.
முன்னதாக இந்த கல்லூரியின் பழைய மாணவனும் சிரேஸ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்ததுடன் ஜனாதிபதி விருது பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
