யாழ்ப்பாணம், சாட்டி துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

0
150

யாழ்ப்பாணம், தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து நடைபாதையாக துயிலும் இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பொது ஈகைச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசில்வாதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.