செஸ் விளையாட்டுக்கு தடை விதித்தது ஆப்கானிஸ்தான்

0
32

ஆப்கானிஸ்தானில் சதுரங்கம் விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் விளையாட்டு பணிமனையின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் “நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்” படி தடைசெய்யப்பட்டுள்ளது.

சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்” என்று கூறினார். இதேவேளை முன்னர் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.