நடிகை திரிஷா விவகாரம்; மன்னிப்பு கோரிய நயினார் நாகேந்திரன்

0
25

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிக்ஷா தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் விஜய் தொடர்பில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை. முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரணும். அதுவும் திரிஷாவை விட்டு அவர் வெளியே வரவேண்டும் என விமர்சித்திருந்தார்.

அதோடு குடும்பஸ்தனாக இருந்த அரசியல் செய்து நான்கு பெரிய தலைவர்கள் சொன்னதை பேசினால்தான் அவருக்கு அரசியல் தெரியும்’ என்று பேசினார். இந்நிலையில் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதுவும் ஒரு ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி அவரை நயினார் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திரிஷா சார்பிலும் இன்று ஒரு அறிக்கை வெளியானது. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன் ‘என்னுடைய அரசியல் வாழ்க்கையை பொருத்தவரையில் எந்த தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதித்தது இல்லை. பேசியதும் இல்லை.

அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் இதனால் யாரேனும் வருத்தப்படுவார்கள் என்றால் மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.