பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்! கையெழுத்து வேட்டை ஆரம்பம்

0
424

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி வழிப்போராட்டம் இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது.

நேற்றைய தினம் கேகாலையில் இருந்து குறித்த ஊர்தி வழிப்போராட்டம் கம்பஹா மாவட்டத்தின் கடவத்த பகுதியை வந்தடைந்திருந்தது.

இந்தநிலையில், இன்று கடவத்தை பகுதியில் இருந்து கொழும்பு வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளது.