தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு வட மாகாணத்துக்கு விஜயம்

0
111

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

அவர்கள் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசார கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அவதானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளனர்.