இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்துவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செக்டார் 94 இல் இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. போஸ்ட் மார்ட்டம் அறையில் ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் அதே மார்ச்சுவரிலேயே துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் என கூறப்படுகின்றது. இந்த பிரேத பரிசோதனை அறை முழுக்க வெறும் சடலங்களாகவே நிறைந்திருக்கின்றன.

இந்த நிலையில் சடலங்களுக்கு மத்தியில்தான் அந்த ஊழியர் பெண்ணுடன் உடலுறவு கொள்வதை அதே மார்ச்சுவரியில் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காணொளி எடுத்திருக்கிறார்.
அவர் காணொளி எடுப்பதை கண்டும், இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் வீடியோவை ஊழியர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.
காணொளியை பார்த்த பலரும் அதிர்ச்சியான நிலையில், தற்போது பொலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியையும் கைது செய்திருக்கிறார்களாம்.