உணவு சிக்கி ஒரு வயது குழந்தை பலி..

0
254

பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரிட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாய் ஒருவர் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து குழந்தை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.