இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய வழக்கில் கணவர் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனது நண்பனுடன் மனைவியை கண்ட கணவர் அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில் அவரது நண்பனையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித்துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
