தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக இந்த மண்ணிலே முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவது ஏதோவொரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளான கருணா அம்மானும், தயா மாஸ்டரும் அதனை வெளிப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
அவர்கள் பார்வையிடலாமே தவிர மரபணு அறிக்கையை வெளியிடும் அளவிற்கு நிபுணர்களும் அல்ல அல்லது வைத்திய அறிவு பெற்றவர்களும் அல்ல.
ஆகவே அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ – தீபன்