இலங்கையில் புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதேவேளை, பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளனர்.
சில்லறை வியாபாரத்திற்காக தினமும் 50 கிலோகிராம் காய்கறிகளை கொள்வனவு செய்து வந்த வியாபாரி தற்போது 10 கிலோகிராமையே கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
முன்னைய பண்டிகை மாதங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்திருந்த போதிலும், இந்த பொருளாதார சிரமங்களினால் கொள்வனவுகள் குறைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை குறையலாம் என குறிப்பிட்டுள்ளார்.