இலங்கையில் பரவிவரும் ஆபத்தான வெளிநாட்டு தாவரம்!

0
338

இலங்கையில் மத்திய மலைநாட்டின் உலர் வலயங்களில் பரவிவரும் தாவர வகை பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராதனை தாவரவியல் பூங்காவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அச்சலா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட இந்தத் தாவர இனத்தை ஹட்டன், பதுளை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் அவதானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கலாநிதி அச்சலா ரட்நாயக்க மேலும் தெரிவித்தார்.