கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் இயக்கப்படும் முறை தொடர்பில் மருதானை ரயில் நிலைய பெண் அறிவிப்பாளர் வெளியிட்ட தகவல் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது “இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் நீர்கொழும்புக்கு புறப்படும். நீர்கொழும்பு வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தப்படும்” என ரயில் நிலைய பெண் அறிவிப்பாளர் கூறினார்.
அந்த அறிவிப்பிற்கமைய தெமட்டகொடயில் இருந்து ராகம வரையிலான ரயில் நிலையங்கள் ஊடாக செல்லும் பயணிகள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில் ரயில் பயணத்தைத் தொடங்கத் தயாரான நிலையில் இன்னொரு அறிவிப்பை அந்த பெண் வெளியிட்டார்.
அதாவது இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் தெமட்டகொட மற்றும் களனி வரை நிறுத்தப்படும் என்றும் களனியிலிருந்து ராகம வரை நிறுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
இதனால் புறப்பட்ட ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டதுடன் களனியை அடுத்து ஹொரபே வரையிலான ரயில் நிலையங்களினூடாக பயண வசதி பெறும் பயணிகள் முன்னோக்கிச் நகர்ந்து சென்று ரயிலில் இருந்து மிகவும் சிரமத்துடன் குதிக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொறுப்பற்ற அந்த பெண் அறிவிப்பாளரால் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்பட்டதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.