தொழிலதிபர் கொலை குறித்து உடனடி அறிக்கை கோரும் நீதிமன்றம்!

0
280

ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த ஒனேஷ் சுபசிங்கவின் சகோதரரான சுபாஷ் சுபசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.

தொழிலதிபர் கொலை தொடர்பில் உடனடி அறிக்கை கோரும் நீதிமன்றம்! | The Court Demands An Immediate Report

மேலும் விசாரணையின் போது உயிரிழந்த ஒனேஷ் சுபசிங்கவின் வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் உட்பட ஐவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.