கொழும்பில் கடத்தப்பட்டு உயிரிழந்த தொழிலதிபர் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கையை உறவினர்கள் ஏற்க மறுப்பதாக கூறப்படுகின்றது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CID இற்கு உத்தரவு
அதன்படி, எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அல்லது அதற்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்னிடையே, முரண்பாடுகள் காரணமாக பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுப்பதாக தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.