உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பைக்குகளில் சிலர் சாகசப் பயணம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோவில் 14 பேர் மூன்று பைக்குகளில் செல்கிறார்கள்.
அதில் ஒரு பைக்கில் ஆறு பேர் மற்றும் மற்ற இரு பைக்குகளில் தலா நான்கு பேர் செல்கிறார்கள். 14 பேர் ஆபத்தான முறையில் பைக்குகளில் பயணம் செய்து சாகத்தை நிகழ்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகி வைரலாக பரவி வருகின்றது.
இதனை கண்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.