இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக கடவுச்சீட்டையும் பணத்தையும் முகவர்களுக்கு வழங்குவதற்கு முன் அதனை சாரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முகவரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான அறிவுறுத்தல்
இந்த விடயத்தை அறிந்து கொள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 1989 என்ற எண்ணை தொடர்பு கொள்ள முடியும்.
![இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கை | Urgent Warning For People Going Abroad From Sl இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கை | Urgent Warning For People Going Abroad From Sl](https://cdn.ibcstack.com/article/97d7b022-1d9d-4e98-922c-09bad34293d2/23-63bbe7f17ae08.webp)
அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட முன்னர் குறித்த விடயத்தை கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களுக்கு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.