பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பினை பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
பிரியா பவானி சங்கர்
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்த அவர் மக்கள் மத்த்தியில் நல்ல வரவேற்பு பெற்று மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதன்பின், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதிஆட்டம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் .
சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் அகிலன், பத்துத்தல, ருத்ரன், இந்தியன் 2, பொம்மை, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
சொந்தமான ஒரு தீவு
இடையில் தன்னுடைய கனவு இல்லமான ஈசிஆர் பங்களாவில் காதலருடன் சமீபத்தில் குடியேறினார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியொன்றில், துபாயில் சொந்தமான ஒரு தீவினை வைத்திருக்கிறீர்களாமே என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு பிரியா, துபாயே என்னோடு தான், டைலி ஒரு கார் யூஸ் பண்றதால கொஞ்சம் கொஞ்சமா பிச்சி வித்துட்டு, இன்னொரு பக்கம் கார் வாங்கிட்டு இருக்கேன் என்று காமெடியாக பதிலடி கொடுத்துள்ளார்.