பிக் பாஸ் சீசன் 6ன் நிகழ்ச்சி விறுவிறுப்பு பஞ்சமில்லாது சென்று கொண்டிருக்கும் நிலையில், 8 பேர் வெளியேறி உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 66 நாட்களை எட்டி உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களின் பொது அறிவைப் பார்த்து நெட்டிசன்கள் கடுப்பில் உள்ளனர்.
சொர்க்கம், நரகம் டாஸ்க்
இந்த வாரம் சொர்க்கம், நரகம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக போட்டியாளர்கள் சிலருக்கு ஏஞ்சல் போன்ற உடையும், சிலருக்கு நரகவாசி உடையும் கொடுக்கப்பட்டுள்ளது. நரகத்தில் இருப்பவர்கள் சைக்கிளில் அதிக பெடல் செய்தால் சொர்க்கத்திற்கு வந்துவிடலாம், மேலும், நரகவாசிகள் தந்திரமாக சிறையை திறந்து திருட்டுத்தனமாகவும் சொர்க்கத்திற்கு வந்து விடலாம்.
இந்த டாஸ்க்கில் நரகவாசியாக இருந்த விக்ரமன் தொடர்ந்து அரைமணி நேரம் சைக்கிளில் பெடலிங் செய்து சொர்க்கவாசியாக மாறிவிட்டார். இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இதில், இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் 10 வயது குழந்தைகளின் அறிவுத்திறமை மேட்ச் பண்ண வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில், மைனாவிடம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
இதற்கு அவர் 18 என பதில் கூறியுள்ளார். அதன் பின் தனலட்சுமியிடம் இந்தியாவின் தேசிய விலங்கு என்ன என கேள்வி கேட்கப்படுகிறது இதற்கு அவர் சிறுத்தை என பதில் அளித்துள்ளார்.
அசீமிடம் ஓடிவிளையாடு பாப்பா அடுத்த 3 வரிகளை சொல்லுங்க என்று கேட்க திருதிருவென்று எல்கேஜி குழந்தை போல முழித்துக்கொண்டு நிற்கிறார்.
கதிரவனிடம் ஆத்திச்சூடியின் முதல் 5 வரிகளை பிக் பாஸ் கேட்க, கதிர் கொஞ்சம்கூட யோசிக்காமல், விஜய் ஆண்டனி இசையமைத்த ஆத்திச்சூடி என்ற ரேப்பாடலை பாடி பிக் பாசையே மிரள வைத்துவிட்டார்.
இந்த ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்,
ஆத்திச்சூடி தெரியலை பேசிக் ஜெனரல் நாலேஜ் கூட இல்லை என்றும், தமிழ் புலவர் என்று மார்த்தட்டிக் கொண்ட அசீமுக்கும் ஒடிவிளையாடு பாப்பா பாடல் கூட தெரியவில்லையா? பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் அடி முட்டாளா இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.