யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்தவரை மடக்கிப் பிடித்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது இன்றையதினம் (28-10-2022) பலாலியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்நிலையில் சங்கிலியை அபகரித்த நபரை மடக்கிப் பிடித்தவர்களுக்கு பலாலி காவல்துறையினரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2022/10/zsd-2.jpg)
இந்த நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் காயத்திரி சிறிராம், திருவள்ளுவர் சனசமூக நிலைய நிர்வாகம், உதவிப் பொலிஸ் அத்தியட்சர், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2022/10/Ads-TAATAS-TRANSPORT.jpg)