மிஸ்டிக் பாபா வாங்காவின் கணிப்பால் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் பல்கேரிய பாபா வாங்கா 1996ல் இறப்பதற்கு முன்பு உலக நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட கணிப்புகள் பல உண்மையாகி வரும் நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக அவர் தெரிவித்த கணிப்பு ஒன்று ரஷ்ய ராணுவ வீரரின் மனைவியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்துள்ளது.
உக்ரைன் போர் தாக்குதலில் முன்வரிசையில் சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவ வீரரிடம் அவரது மனைவி, பாபா வாங்காவின் கணிப்புப்படி இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவே விரைவாக திரும்பி வந்து விடும்படி கேட்டு கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு எடுக்கப்பட்டு உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை இயக்குனரகத்தால் யூடியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.
பல முக்கிய நிகழ்வுகளில், 9/11, பிரெக்சிட் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றை துல்லியமாக கணித்த பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்காவை குறிப்பிட்ட ரஷ்ய வீரரின் மனைவி வாங்காவின் கணிப்புகளின் படி இவை அனைத்து 2024 வரை நீடிக்கும் என்றும் இரண்டு வருடங்கள் வரை உங்களை பார்க்க மாட்டேன் என கண்ணீவிட்ட ரஷ்ய வீரரின் மனைவி இந்த கால இடைவெளியில் தவறுதலாக எதுவும் நடைபெற்று விட்டால் என்ன செய்வது? என கதறி அழுதாள்.
இறுதியில் அவளது கணவன் அவரை ஆறுதல் படுத்தினாலும், அவள் என்னால் முடியாது முடியாது என திரும்ப திரும்ப பதிலளித்தது அந்த அழைப்பில் பதிவாகியுள்ளது.
அதேசமயம் ஐரோப்பா பழமையான இடமாறாக குறைக்கப்பட்ட பிறகு, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.