பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணும் அவரது 2 மகள்களும் பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும் அவர்கள் இன்று (10) காலை தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
![இலங்கையில் இன்று இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் (Photos) | Shocking Incident Place In Sri Lanka Today இலங்கையில் இன்று இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் (Photos) | Shocking Incident Place In Sri Lanka Today](https://cdn.ibcstack.com/article/7e595c64-3dde-4982-8bd2-f1f4edefe52c/22-631c33ddb8a63.webp)
சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
அத்துடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
![இலங்கையில் இன்று இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் (Photos) | Shocking Incident Place In Sri Lanka Today இலங்கையில் இன்று இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம் (Photos) | Shocking Incident Place In Sri Lanka Today](https://cdn.ibcstack.com/article/bdd936b0-95ef-46fe-a8cb-e8807484f257/22-631c33ddf0102.webp)
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.