இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளி; வைரலாகும் பதிவு!

0
600

இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு வைரலாகி வருகிறது. பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Elizabeth) காலமானார்.

ராணி இரண்டாம் எலிசபெத் (Elizabeth) 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று இறக்கிறார் என்று இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் திகதி டுவிட் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் மே 25 ஆம் திகதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மார்ச் 17, 2062 அன்று பூமி முழுவதுமாக தீயில் மூழ்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். டுவிட்டர் பதிவை பதிவு செய்தவர் யார் என்ற தகவல் தெரியவில்லை.