இலங்கையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (03-09-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ் எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மேலும், முச்சக்கரவண்டி சாரதி மேலும் இரு பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் பேராதனை வைத்தியசாலையில் பலத்த காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.