சிங்கராஜ வனத்தில் உள்ள ஹோட்டல் சட்டபூர்வமான விதத்தில் கட்டப்பட்டது என முன்னாள் பிரதமர் மஹிந்தவின் புதல்வர்களில் ஒருவரான ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் விவகாரம் ஊடகமொன்றிற்கு ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஹோட்டல் தீக்கிரை
இதேவேளை மே 9 ம் திகதி ரோகித ராஜபக்சவின் ஹோட்டல் ஒன்றே தீக்கிரையாக்கப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏதாவது தவறுநடந்திருந்தால் நீதித்துறை நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என தெரிவித்த ரோகித ராஜபக்ச பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.