காட்டு யானை பள்ளி மாணவியை கொன்றது

0
567

ஹசலக்க பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை கஹெயாய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தனது உயிரிழந்த சகோதரனுக்காக தானம் வழங்குவதற்கு ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹெயாய பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த சிறுமி யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவியின் உயிரை பறித்த காட்டு யானை | A Wild Elephant Killed A Schoolgirl

இதன்போது பலத்த காயமடைந்த சிறுமி ஹசலக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.