மறுசீரமைக்கப்படும் இலங்கை மின்சார சபை

0
518

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கணக்கியல், முகாமைத்துவம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் முதலான பணிகளை மின்சார சபையில் உள்ள பொறியியலாளர்களே செய்கின்றதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப பணியையே செய்ய வேண்டும். எனவே, இதற்கு சிறந்த முகாமைத்துவ குழு அவசியமெனவும் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.