முஸ்லிம் காங்கிரஸுக்கு மூன்று பதவிகளை ஒதுக்கிய ஜனாதிபதி!

0
587

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையும் பட்சத்தில் அதற்கு மூன்று அமைச்சுப் பதவிகளை ஒதுக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.

அதன் பிரகாரம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மிகப்பலமான அமைச்சுப்பதவியொன்றும், அதற்கீடான இரண்டு இராஜாங்க அமைச்சுப்பதவிகளை எச்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருக்கு வழங்கவும் ஜனாதிபதி விருப்பம் கொண்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைந்தால் மாத்திரமே சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்குமென்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

அதன் காரணமாக நிமல் லான்சா ஜனாதிபதியின் சார்பில் இந்த முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.