முன்னாள் மனைவியை தீ வைத்து கொன்ற சீன நபருக்கு மரண தண்டனை!

0
579

தனது முன்னாள் மனைவியை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது தீ வைத்து கொலை செய்த சீன நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிச்சுவான் மாகாணத்தின் மலைகளில் அவரது வாழ்க்கை குறித்த வீடியோக்களை லட்சக்கணக்கான அவரது பின்தொடர்பவர்கள் பார்த்துள்ளனர். இந்த வழக்கு சீனாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சீனப் பெண்களில் கால் பகுதியினர் வீட்டு துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் திருமணமான நிலையில் குடும்ப விவகாரம் என்று மட்டும் கூறி தனது கணவரின் வன்முறை குறித்து காவல்துறையை அணுகியதாக கூறப்படுகிறது.

ஜூன் 2020 இல் லாமு டாங்கை விவாகரத்து செய்தார். பின்னர் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் தந்தையின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி பெண்ணை எரித்துவிட்டான். அவள் உடலில் 90% தீக்காயம் அடைந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இறந்தாள்.

அதன் பின்னர் அவரது கணவர் டாங் லுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கில் உள்ள தொலைதூர கிராமப்புற பகுதியான அபா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் அவரது குற்றம் மிகவும் கொடூரமானது என்று குறிப்பிட்டது.