ஜனாதிபதியின் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை; சபாநாயகர்

0
563

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால் எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

மஹிந்த யாபா அபேவர்தன

இந்நிலையில் ஜனாதிபதி பதவி வலிகினால் எதிர்வரும் 19 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும் 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.