கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,910 கோடி அபராதம்!

0
526

அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ஆயிரத்து 910 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் மெக்சிகோ சிட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படைக் கொள்கைகளை குறைத்து மதிப்பீடும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.