நாட்டின் புதிய பிரதமர் பொறுப்பேற்கும் போது தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனை குறிப்பிட்டார்.