கட்சித் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு zoom தொழில்நுட்பம் மூலம் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று அறிவித்திருந்தார்.
நாடு கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் சபாநாயகர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதற்கு சமூக வலைத்தள பயனாளர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை zoom தொழில்நுட்பம் மூலம் நடத்தலாம் என்றும் சமூக ஊடக பயனர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.