வெளிநாட்டு கடன் பெறுவதில் இலங்கைக்கு ஆபத்து

0
524

தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி  நிச்சயமாக அதனைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடியின் காரணமாக  ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த காத்திருப்பே தற்போதைய அரசியல் நெருக்கடியை கொண்டு வந்தது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன்(பாலா மாஸ்டர்) தெரிவித்துள்ளார்.  

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து  வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.