மலையகப் பாதையில் ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

0
554

பதுளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மனிக்கே ரயில் தடம் புரண்டதால், மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

நேற்று காலை 8.40 அளவில் குறித்த ரயில் தரம்புரண்டதாக ரயில் திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த ரயிலை தடமேற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.