அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள போது சமூக ஊடகங்களை முடக்க முடியாது! – சட்டத்தரணிகள் அமைப்பு

0
371

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அச்சமடையக்கூடாது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசரகாலசட்டம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார். 

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளவேளை சமூக ஊடகங்களை முடக்கும் சட்டம் எதுவும் நாட்டில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.