இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை

0
512

இந்தியாவிடமிருந்து இலங்கை மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடன் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இக் கடனை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70 வீதத்தில் குறைந்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னதாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கடந்த 17 ஆம் திகதி புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டது.

உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கை மேலும் ஒரு பில்லியன் டொலரை இந்தியாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.