அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

0
330

இலங்கையில் தனியார் வங்கிகளின் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

தனியார் வங்கிகள் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 280 ரூபா வரை ஆக உயர்வடைந்துள்ளது, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 270 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாவாக உயர்வடைந்து கொள்வனவு விலை 355 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 311 ரூபாகவும் விற்பனை விலை 297 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 302 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 224 ரூபாவாகவும் கொள்வனவு விலை 213 ரூபாகவும் பதிவாகி உள்ளது.

இதேவேளை, இலங்கையில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி குறைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது