இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

0
390

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.

1. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவர் இன்றைய தினம் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இருதய நோய் மற்றும் கொரோனா நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

2. கோனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொரோனா நிமோனியா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.