மாறுவேடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்; பிடிபட்ட துப்பாக்கிதாரி

0
27

கடந்த ஜனவரி 16 ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் மாறுவேடத்தில் புர்கா அணிந்து வந்து தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை சுட்டுக்கொலை செய்து இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர் உடவலவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உடவலவ, கொழும்புஹேஆர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த மார்ச் 03 ஆம் திகதியும் கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.