நிதி நிலைமை தொடர்பில் எவரும் இனி கனவு காண கூடாது; ஜனாதிபதி அனுர

0
33

நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.

இதன்போது ஜனாதிபதி உரையாற்றுகையில், பொருளாதார மீட்சிக்கு எடுத்த சிறந்த தீர்மானங்களால் பெருமை கொள்கிறோம். பேரண்ட பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்யவும், நிதி ஒழுக்கத்தை நிலைப்படுத்தவும் கடுமையான எடுத்துள்ளோம்.

பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது எனத் தெரிவித்தார்.