சைவசமயத்தை கேலிக்கூத்தாக்கும் கிளிநொச்சி பூசகர்; சமூக வலைத்தளங்களில் கடும் விசனம்

0
20

கந்த சக்ஷ்டி விரதம் இந்து மக்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் முருகனுக்காக அனுக்ஷ்டிக்கப்படும் மிகக் கடுமையான விரதமாகும். விரதத்தின் ஆறாம் நாளில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு முருகன் ஆலயங்கள் உட்பட பல ஆலயங்களில் இடம்பெறுவது வழமையாகும்.

இந்நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற சூரன் போரில் ஆலய பூசகர் ஒருவர் முருகனுக்கு பதிலாக தானே மயில் வாகனத்தில் உலா வந்து சூரசனை வதம் செய்த சம்பவம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சைவசமயத்தை கேலிக்கூத்தாக்கும் இவ்வாறான குறளிவித்தைகள் எதற்கு என சைவ சமய ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பில் ஆலய நிவாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.