யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக பொலிஸார் எடுத்த நடவடிக்கையை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்த நடவடிக்கையினை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்றதைப் போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்தார்.
வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை (10) நடைபெற்றது.
கலந்துரையாடலின் போது, பொலிஸாரின் நடவடிக்கையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்த ஆளுநர் சில பொலிஸ் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் ஏற்கப்படாமல் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.